Tuesday, June 30, 2020


தாய்

Mother
என் உயிர் காதலி அவள் !
அவள் காதல் ஆழமானது,  அழகானது.
என் முகம் தெரியும் முன்பே
என்னை காதலித்தவள்,
என் முதல் மூச்சுக்காய்
மரணத்துடன் போராடியவள்,
பூமி தாங்கும் முன்பே
என்னை பூவாய் தாங்கியவள்,
தோழியாய் தோள் கொடுத்தவள்,
உதிரத்தால் அமுதூட்டியவள்,
என் வெற்றியில் துள்ளி குதித்தவள்,
தோல்வியில் தட்டி கொடுத்தவள்,
ஆம்! பெண்மைக்கே பெருமை
 சேர்த்த அவள்... என் தாய் !


Source - Nisha (BA reading)
மனிதன்


தன்னலத்துக்காக வாழ்பவன் நன்றி மறப்பவன் சுயநல சிந்தனை கொண்டவன் தேவைக்காக பழகுவன் முன்சிரிப்புடன் பின்புறம் பாடுபவன் தவறை ஒப்புக்கொள்ளாதவன் தன் குறை மறந்து பிறர்குறை தேடுபவன் நல் உறவுகள் இடையில் பிளவை ஏற்படுத்தி சுகம் காண்பவன் சக மனிதனை ஏளனமாக பார்ப்பவன் தவறான வழியில் சம்பாதித்து வாழ நினைப்பவன் பெண்களில் தவறான பார்வை கொண்டவன் பிறர் மனதை புண்படும்படி பேசுபவன் உருவத்தை செல்வத்தை கொண்டு இழிவுபடுத்துபவன் போன்ற மனிதன் இருக்கும் அதே பிரபஞ்சத்தில் தான்.,

மனிதாபிமானம் கொண்டவன் பொது நலத்துடன் வாழ்பவன் கஷ்டத்தில் உதவுபவன் பிறர்குறை தேடாதவன் தவறை சீர்திருத்தி கொள்பவன் கண்ணியமான பார்வை கொண்டவன் பெண்மையை மதிப்பவன் கொளரவமாக உழைப்பவன் பிறருக்கும் உள்ளம் வலிகள் உண்டென்பதை உணரந்து நடந்து பேசுபவன் துரோகிக்கும் நல்லது நினைப்பவன் எதிரிக்கும் பிரார்த்திப்பவன் பொறாமை கொண்டு சூழ்ச்சி செய்யும் மிருகங்களையும் புண்சிரிப்புடன் கடந்து தாண்டி செல்லுகின்ற மனிதனும் வாழ்கிறான். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்  இவ்வாறான மனிதர்களது இருப்புதான் உலகின் சமநிலையை தீர்மானிக்கிறது.

மனிதன் மனிதனுக்கு செய்யும் கெடுதலுக்கு உலகிலேயே பலமடங்காக இழிவுபடுத்தபட்டு தண்டிக்கபடுகிறான் இதுவே நிதர்சனம்.


Source - Mohamed_Ifthikhan

Reopen Srilanka Airport




கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர்செய்யும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது மாற்றப்பட்டுள்ளது


*நீரில் மூழ்கி இளைஞன்     மரணமடைந்துள்ளார்  மீராவோடையில்   சம்பவம்* 




நீராட சென்றபோது, நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று  (28) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை – புளியடித்துறை எனும் இடத்திற்கு குடும்பத்தோடு நீராட சென்ற இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில், மிக நீண்ட நேரத்திற்குப் பின்னர் ஆற்றிலிருந்து இளைஞனின் உடல் மீட்கப்பட்டது.  வாழைச்சேனை – செம்மண்ணோடையைச் சேர்ந்த பதினேழு வயதுடைய பெளசுல் பாகிம் என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த குறித்த இளைஞனின் உடல் பிரதே பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Welcome

Wel come to my web site 

Wel come

Wel come to my blogger 

எறும்பு மற்றும்   வெட்டுக்கிளி கதை ஒரு காலத்தில், ஒரு எறும்பு இருந்தது, கோடை முழுவதும் கடினமாக உழைத்து, உணவை சேகரித்து குளிர்காலத்திற்காக ச...